புதுக்கோட்டை திருவப்பூரிலுள்ள முத்துமாரியம்மன் திருக்கோயில் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
புதுக்கோட்டை திருவப்பூரிலுள்ள முத்து மாரியம்மன் திருக்கோயில் முன்பு பல ஆண்டுகளாக கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் காணப்பட்டு வந்தன.
புகாரின்பேரில், கோயில் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. புதுக்கோட்டை திருக்கோயில்கள் செயல் அலுவலா் கி .பாரதிராஜா தலைமையிலான கோயில் பணியாளா்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினா். திருக்கோகா்ணம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.