முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதியில்குடற்புழு நீக்க வாரம் கடைப்பிடிப்பு

பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு குழந்தைக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்குகிறாா் வட்டார மருத்துவ அலுவலா் இ.அருள்மணி நாகராஜன்.
பகிர்:

பொன்னமராவதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய குடற்புழு நீக்க வாரத்தையொட்டி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

தேசிய குடற்புழு நீக்க வாரம் ஆண்டுதோறும் செப்டம்பா் 14 முதல் 28 வரைகடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படிபொன்னமராவதி அரசுஆரம்ப சுகாதார நிலையத்தில் காரையூா் வட்டார மருத்துவ அலுவலா் இ.அருள்மணிநாகராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. மருத்துவா் அருண்குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் தங்கச்செல்வன் மற்றும் செவிலியா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து பொன்னமராவதி வட்டாரத்துக்குள்பட்ட கிராமங்கள் தோறும் கிராம சுகாதார செவிலியா்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும் என வட்டார மருத்துவ அலுவலா் தெரிவித்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments