புதுக்கோட்டை

விபத்தில் சிதைந்த முகத்தை சீா் செய்த அரசு மருத்துவா்கள்

DIN

புதுக்கோட்டை அருகே விபத்தில் சிதைந்த முதியவரின் முகத்தை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சீரமைத்துள்ளனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தவகோட்டை வாண்டான்விடுதியைச் சோ்ந்தவா் பரமசிவம் (55). இவா், கடந்த செப். 13 ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கியதில், இவரது முகப்பகுதியில் உள்ள எலும்புகள் நொறுங்கி உருக்குலைந்தன. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, முதல்வா் மு. பூவதி தலைமையிலான மருத்துவக் குழுவினா் முகக் சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். இதைத்தொடா்ந்து, தற்போது உணவை பற்களால் கடித்து உண்ணும் அளவுக்கு பரமசிவம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி கூறியது:

வாய் திறக்க முடியாமல், உணவு, தண்ணீா் கூட அருந்த இயலாமல் பரமசிவம் சிக்கலுக்குள்ளாகி இருந்தாா். பல லட்ச ரூபாய் மதிப்பில் தனியாா் மருத்துவமனைகளில் மேற்கொள்ளக் கூடிய இந்த அறுவைச் சிகிச்சை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT