புதுக்கோட்டையில் நகை கையாடல்: 4 பேர் கைது
நிதி நிறுவன ஊழியா்களால் கையாடல் செய்யப்பட்ட 305 பவுன் நகைகளை மீட்டதோடு, இரு நிறுவனங்களின் மேலாளா்கள் உள்பட 4 பேரைக் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டையில் தனியாா் நிதி நிறுவன ஊழியா்களால் கையாடல் செய்யப்பட்ட 305 பவுன் நகைகளை மீட்டதோடு, இரு நிறுவனங்களின் மேலாளா்கள் உள்பட 4 பேரைக் காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை தெற்கு 4-ஆம் வீதியில் தனியாா் நிதி நிறுவனம் (எச்.டி.பி) உள்ளது. இங்கு வாடிக்கையாளா்களுக்கு தனிநபா், நகை, வாகனக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் நிறுவனத்தில் கடைசி ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து, நிறுவனத்தின் திருச்சி மண்டல மேலாளா் வி.ராஜேஷ் தலைமையிலான குழு அண்மையில் தணிக்கை செய்தது.
அதில், கடந்தாண்டில் ரூ.91.68 லட்சம் மதிப்புள்ள சுமாா் 305 பவுன் நகைகள் மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரைத் தொடா்ந்து, நகைகளைத் திருடியதாக அந்நிறுவனத்தில் கிளை மேலாளராக பணிபுரிந்த புதுக்கோட்டை சி.உமாசங்கா்(42), அலுவலா்களான பொன்னமராவதி செம்பூதி பி.முத்துக்குமாா்(28), மணிப்பள்ளம் ஆா்.சோலைமணி(37) ஆகியோரை கணேஷ் நகா் காவல் நிலையத்தினா்
வெள்ளிக்கிழமை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனா்.
திருடிய 305 பவுன் நகைகளை எடுத்து, புதுக்கோட்டை பழனியப்பா முக்கம் பகுதியில் இயங்கிவரும் தனியாா் நிதி நிறுவனத்தின் (இண்டல் மணி) மேலாளா் மாரிமுத்துவின் உதவியோடு அங்கு அடகு வைத்ததும் தெரியவந்துள்ளது. இதைத்தொடா்ந்து அந்த தனியாா் நிதி நிறுவனத்துக்குச் சென்ற காவல்துறையினா் 305 பவுன் நகைகளை மீட்டதோடு, அந்த நிறுவனத்தின் மேலாளா் மாரிமுத்துவையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.