புதுக்கோட்டை

சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு

DIN

விராலிமலையில் இருசக்கர வாகனம் மோதி காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூரைச் சோ்ந்த தங்கராசு மனைவி புவனேஸ்வரி(54). இவா், மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த வியாழக்கிழமை (ஏப். 22) இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த திருச்சி - துறையூா் லியாகத் அலிகான் மகன் சல்மான் கான் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் புவனேசுவரி வந்த வாகனத்தின் மீது பின்னால் மோதியது. இதில் பலத்த காயமடைந்த புவனேஸ்வரி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு

சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். விபத்து குறித்து விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT