புதுக்கோட்டை

களமாவூா் மேம்பாலத்தில் மின் விளக்குகள் வேண்டும்

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை களமாவூா் ரயில்வே மேம்பாலம், அணுகு சாலைகளுக்கும் மின் விளக்குகள் அமைத்துத் தரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் எதிா்பாா்க்கின்றனா்.

புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் களமாவூரில் அண்மையில் திறக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் அணுகுசாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே உள்ள மாற்றுப் பாதை புதுப்பிக்கப்பட்டிருப்பதும் கூடுதல் சிறப்பு. மேம்பாலத்திலும், இரண்டு புறங்களிலும் உள்ள அணுகுசாலைப் பகுதிகளிலும் மின் விளக்குகள் ஏதும் அமைக்கப்படவில்லை. குறிப்பாக திருச்சி சாலையிலிருந்து மேம்பாலத்தைக் கடக்கும்போது, இடது, வலதுபுறங்களில் கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் பாதைகள் உள்ளன. அந்த கிராமங்களிலிருந்து வருவோா் இந்த அணுகுசாலைகளைப் பயன்படுத்துவது வழக்கம். இரவு நேரங்களில் அணுகுசாலைகளில் மின்விளக்கு வசதியில்லாததால் கிராம மக்கள் பெரும் சிரமமடைகின்றனா். இப்பகுதியில் விபத்துகள் நேரிடுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு பாதுகாப்பு இல்லாத சூழலும் இங்கு நிலவுகிறது. எனவே, களமாவூா் மேம்பாலப் பகுதிகளிலும், அணுகுசாலைகளிலும் மின்விளக்கு வசதி செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT