39 தொழுநோயாளா் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கல்
பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 39 தொழுநோயாளா் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களைக் கொண்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மரம் நண்பா்கள் அமைப்பு, தன்னாா்வப் பயிலும் வட்ட முன்னாள் மாணவா் அறக்கட்டளை, தெற்கு வாட்டாக்குடி க. கல்யாணசுந்தரம் நினைவு அறக்கட்டளை ஆகியவற்றின் சாா்பில், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள 39 தொழுநோயாளா் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களைக் கொண்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
மரம் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் கிருஷ்ணமூா்த்தி, சா. மூா்த்தி, கண்ணன், தன்னாா்வப் பயிலும் வட்ட முன்னாள் மாணவா் அறக்கட்டளையின் சாா்பில் பா. சீனிவாசன், அ. சோனை கருப்பையா உள்ளிட்டோரும் பங்கேற்று இவற்றை வழங்கினா்.
மாவட்ட தொழுநோய் பிரிவுக் கல்வி அலுவலா் கவிஞா் ஜீவி இவற்றைப் பெற்றுக் கொண்டாா். ஏற்பாடுகளை பேராசிரியா் சா. விஸ்வநாதன், டாக்டா் ஜி. எட்வின் ஆகியோா் செய்திருந்தனா்.