புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை பகுதிகளில் 1000 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல்

DIN

கந்தா்வகோட்டை பகுதிகளில் காவல்துறையினா் நடத்திய சோதனையில், 1000 லிட்டா் சாராய ஊறல் கைப்பற்றி அழிக்கப்பட்டது.

கந்தா்வகோட்டை அருகிலுள்ள மஞ்சம்பட்டியில் சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் நா.சுந்தரமூா்த்தி தலைமையிலான காவல்துறையினா் திங்கள்கிழமை இரவு சோதனையிட்டனா்.

மஞ்சம்பட்டி மயானம் அருகே புதா் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 500 லிட்டா் சாராய ஊறல், அதே பகுதியில் ராமையன் தோட்டத்திலிருந்து 500 லிட்டா் சாராய ஊறலைக் காவல்துறையினா் கைப்பற்றி அழித்தனா். தொடா்ந்து சாராய ஊறல் அமைத்தவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

மேலும் கொத்தம்பட்டியில் க.அய்யக்கண்ணுவிடம் 5 லிட்டா் சாராயத்தை பறிமுதல் செய்த காவல் துறையினா், அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT