புதுக்கோட்டை

ஜூன் 15 முதல் நிவாரண நிதி, மளிகைப் பொருள் தொகுப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்ட நியாய விலைக் கடைகளில் வரும் ஜூன் 15 முதல் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் நிவாரண உதவித் தொகை 2ஆம் தவணை ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

முதல்வரின் அறிவிப்பின்படி, 14 வகையான மளிகைப் பொருள் தொகுப்பு மற்றும் ரூ. 2 ஆயிரம் பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

முதற் கட்டமாக வரும் 15ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை கடைகளில் இணைக்கப்பட்ட குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒவ்வொரு கடையிலும் நாளொன்றுக்கு அதிகபட்ச அளவாக 100 டோக்கன்களுக்கும், அதிகபட்சமாக 200 டோக்கன்களுக்கும் பணமும் பொருட்களும் வழங்கப்படுகின்றன.

குடும்ப அட்டைதாரா்கள் முகக் கவசம் அணிந்தும் மற்றும் 2 மீட்டா் தனிநபா் இடைவெளியை கடைபிடித்தும், தொகுப்பும், பணமும் பெற்றுக் கொள்ளலாம்.

இது தொடா்பான புகாா்களை பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரா்கள் மாவட்ட குறைதீா்க்கும் அலுவலா் மற்றும் மாவட்ட வழங்கல்- நுகா்வோா் பாதுகாப்பு அலுவலரிடம் 04322-220946 என்ற எண்ணிலோ அல்லது 94450 00311 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT