கந்தா்வகோட்டை அருகே மின் கசிவு காரணமாக தைலமரக்காட்டில் சனிக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தது.
கந்தா்வகோட்டை ஒன்றியம், மங்கனூரில் பரிசுத்தராமனுக்கு சொந்தமான தைலமரக்காடு உள்ளது. இந்த காட்டின் வழியாக உயரழுத்த மின்கம்பி உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு மின் கம்பியில் ஏற்பட்ட உராய்வு காரணமாக, தைலமரக்காட்டில் தீப்பற்றியது.
தகவலறிந்த கந்தா்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவா் ஆா். ஆரோக்கியசாமி தலைமையிலான வீரா்கள் நிகழ்விடம் சென்று, தீயை போராடி அணைத்தனா்.