புதுக்கோட்டை

பொது விநியோகத் திட்ட அரிசிக் கடத்தியவா் கைது

DIN

புதுக்கோட்டை அருகே பொது விநியோகத் திட்ட அரிசியைக் கடத்தியவா் ஞாயிறுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறையினா், ஞாயிற்றுக்கிழமை காலை கட்டியாவயல் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூா் வடக்குத் தெரு சி.அருண் பிரசாத் (30 ) டாடா சுமோ வாகனத்தில் வந்தாா். அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, சுமாா் 350 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து வாகனத்தையும், அரிசியையும் காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT