புதுக்கோட்டை

ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.3.50 லட்சம் பறிமுதல்

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உரிய ஆவணங்களின்றி வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.50 லட்சத்தை சனிக்கிழமை இரவு தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சனிக்கிழமை இரவு தோ்தல் பறக்கும் படையினா் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டதில், கீழாத்தூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்த சி. லெட்சுமணன் (27) என்பவா் உரிய ஆவணங்களின்றி ரூ.3.50 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.

தொடா்ந்து, ரொக்கத்தைப் பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், கந்தா்வகோட்டை தோ்தல் நடத்தும் அலுவலா் கருணாகரனிடம் பணத்தை ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

தமிழகத்தில் கோடையிலும் பரவும் டெங்கு: கொசு ஒழிப்பை விரிவுபடுத்த அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT