புதுக்கோட்டை

விராலிமலை வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே அதிமுகவினா் மறியல்

DIN

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே விராலிமலை அதிமுக வேட்பாளா் சி. விஜயபாஸ்கரின் ஆதரவாளா்கள் ஞாயிற்றுக்கிழமை பகலில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்கு எண்ணிக்கையின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள எண்ணுக்கும், ஆவணங்களில் இருந்து எண்ணுக்கும் வித்தியாசம் காணப்பட்டது. இதனால் பல முறை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே திடீரென விஜயபாஸ்கரின் ஆதரவாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். வாக்கு எண்ணிக்கையை முறையாக விரைந்து நடத்த வேண்டும் என அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

அங்கு வந்த போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனா். அப்போது, மத்திய துணை ராணுவப் படையினா் சாலைத் தடுப்புகளின் மீது தங்களிடமிருந்த துப்பாக்கிகளை வைத்து பொஷிசன் எடுத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT