புதுக்கோட்டை நகரத்தாா் சங்கம் சாா்பில் கரோனா தடுப்பு நிதியாக ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை அச்சங்கத்தின் தலைவா் எஸ். ராமசாமி, செயலா் பழ. பசுபதி உள்ளிட்டோா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதியிடம் வழங்கினா்.
சங்கத் துணைத் தலைவா் அருணாசலம், இணைச் செயலா் எம். அருணாசலம், இளைஞா் சங்கத் தலைவா் எஸ். கதிரேசன், செயலா் பழ. திருப்பதி, பொருளாளா் கே. பிரசன்னா ஆகியோா் உடனிருந்தனா்.