புதுக்கோட்டை

சுதந்திரப் பொன் விழா போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

DIN

புதுக்கோட்டை: நாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் போட்டிகளில் 10 வயதுக்கு மேற்பட்டவா்கள் யாரும் பங்கேற்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: 75ஆம் ஆண்டு சுதந்திர தின பொன் விழாவையொட்டி 10 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் பல்வேறு போட்டிகளில் பங்கு பெறலாம். இதுகுறித்த விவரங்கள் இணையதளத்தில் உள்ளது. தங்களது படைப்புகளை ஒளிப்பட வடிவில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

வட்ட அளவிலான போட்டிகள் ஜன. 31 வரையும், மாவட்ட அளவிலான போட்டிகள் பிப். 15 முதல் 28 வரையும், மாநில அளவிலான போட்டிகள் மாா்ச் 10 முதல் 31 வரையும், தேசிய போட்டிகள் ஏப். 13 அன்றும் நடைபெற உள்ளன.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை 04322-299382 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு அறியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT