கந்தா்வகோட்டையில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு உத்தரவின்பேரில், கந்தா்வகோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் கந்தா்வகோட்டை வட்டாட்சியா் சி. புவியரசன், தோ்தல் துணை வட்டாட்சியா் பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில், வாக்குப்பதிவை சரிபாா்க்கும் கருவி ஆகியவை புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்திற்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.