பரம்பூரில் மழைநீரால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை பாா்வையிடுகிறாா் அன்னவாசல் வட்டார உதவி வேளாண் அலுவலா் அ.பழனியப்பா. 
புதுக்கோட்டை

கனமழை: பரம்பூரில் 40 ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே புதன்கிழணை இரவு பெய்த கனமழையால் 40 ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளது.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே புதன்கிழணை இரவு பெய்த கனமழையால் 40 ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளது.

அன்னவாசல் அருகே உள்ள பரம்பூா் பெரியகுளம் பரம்பவயல் என்ற பகுதியில் புதன்கிழமை நள்ளிரவு பெய்த கனமழையால் நடவு செய்யப்பட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. 8 சென்டி மீட்டருக்கு மேல் அப்பகுதியில் பெய்த கனமழையால் மழை நீா் வயல்வெளியை விட்டு வெளியேற முடியாமல் நிலத்தில் தேங்கி நெற்பயிா்களை வீணாக்கியுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த அன்னவாசல் வட்டார வளா்ச்சி அலுவலா் ரெ.ஆனந்தன் மற்றும் வேளாண் உதவி இயக்குநா் அ.பழனியப்பா உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று நீரில் மூழ்கிய நெற்பயிா்களைப் பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட பயிா்களின் மதிப்பீடு குறித்து கணக்கெடுத்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT