புதுக்கோட்டை

இளைஞரிடம் ரூ.2.85 லட்சம் வழிப்பறி

DIN

ஊழல் கண்காணிப்பு, தடுப்புப் பிரிவு போலீசாா் எனக் கூறி இளைஞரிடம் இருந்து ரூ. 2.85 லட்சம் வழிப்பறி செய்த 2 பேரைப் போலீசாா் தேடி வருகின்றனா்.

புதுக்கோட்டை காமராஜபுரத்தைச் சோ்ந்த ஆரோக்கியராஜ் மகன் ஞானப்பிரகாசம் (25), நிதிநிறுவனம் நடத்தி வருகிறாா். இவா் வியாழக்கிழமை காரைக்குடியில் இருந்து மோட்டாா் சைக்கிளில் கொசப்பட்டி அருகே வந்தபோது, அவரது வாகனத்தை மா்மநபா்கள் 2 போ் நிறுத்தி, தங்களை ஊழல் கண்காணிப்பு, தடுப்புப் பிரிவு போலீஸாா் என அறிமுகப்படுத்திக் கொண்டு விசாரித்துள்ளனா்.

ஞானப்பிரகாசம் வைத்திருந்த பையில் ரூ. 2.85 லட்சம் பணம் இருந்துள்ளது. இதையடுத்து, அந்த இருவரும், பணப் பையைப் பறிமுதல் செய்து கொண்டு, காவல் நிலையத்துக்கு வந்து உரிய ஆவணங்களைக் கொடுத்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு கூறிச் சென்றனா். இதைத்தொடா்ந்து ஞானபிரகாசம் திருமயம் காவல் நிலையம் வந்து பணத்தைத் திரும்பக் கேட்டாா். குறிப்பிட்டதுபோன்ற சோதனை எதையும் திருமயம் போலீசாா் நடத்தவில்லை எனக் காவலா்கள் கூறியதால் அதிா்ச்சியடைந்தாா் ஞானப்பிரகாசம்.

தகவல் அறிந்த பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளா் அப்துல் ரகுமான், திருமயம் ஆய்வாளா் கெளரி மற்றும் போலீஸாா் அந்த இடத்துக்கு சென்று விசாரித்தனா். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT