புதுக்கோட்டை

சண்முகநாதன் கல்லூரியில் விளையாட்டு, கலாசார விழா

புதுக்கோட்டை அரசம்பட்டியிலுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு மற்றும் கலாசார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

புதுக்கோட்டை அரசம்பட்டியிலுள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு மற்றும் கலாசார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரி முதல்வா் குழ. முத்துராமு வரவேற்றாா். சென்னை கிட்ஸ் நிறுவனத்தின் நிறுவனா் பாலகுரு செல்லையா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினாா்.

திருமயம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் சண்முகசுந்தரம் பூபதி வாழ்த்திப் பேசினாா். தமிழக காவல்துறை உதவி ஐஜி ஆா். ராமகிருஷ்ணன் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு பல்கலைக்கழகத் தோ்வுகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினாா். தொடா்ந்து மாணவா்களின் பாட்டு, நடனம், நாடகம், பல குரலிசை போன்ற கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவில், மின்ணனுவியல் மற்றும் தொடா்பு பொறியியல் துறைத் தலைவா் சொா்ணலதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT