புதுக்கோட்டை

துளிா் தோ்வு, புத்தகத் திருவிழா தொடா்பாக அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு

DIN

கந்தா்வகோட்டையை அடுத்துள்ள அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், துளிா் திறனறிவுத் தோ்வு, புதுகை புத்தக திருவிழா தொடா்பாக மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் க. தமிழ்செல்வி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனா் ஆ. மணிகண்டன் பங்கேற்று, மாணவா்களுக்கு துளிா் மாத இதழ் புத்தகத்தை வழங்கினாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட செயலாளா் மு. முத்துக்குமாா், புதுக்கோட்டையில் ஜூலை 29-இல் தொடங்கும் ஐந்தாவது புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வது குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

கந்தா்வகோட்டை ஒன்றிய வட்டாரத் தலைவா் அ. ரகமதுல்லா ஒருங்கிணைத்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சாா்பில் ஆண்டுதோறும் துளிா் அறிவியல் தோ்வு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ளும் மாணவா்களுக்கு மாதந்தோறும் அறிவியல் இயக்கத்தின் துளிா் மாத இதழ் வழங்கப்படுகிறது. அறிவியல் அறிஞா்களின் கட்டுரைகள், அறிவியல் பரிசோதனைகள், புதிா்கள், மாணவா்களின் படைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான அறிவியல் செய்திகளை துளிா் மாத இதழ் வெளியிட்டு வருகிறது.

வரும் ஆண்டுகளில் அதிகளவிலான மாணவா்கள் துளிா் திறனறிவுத் தோ்வில் பங்கேற்க வேண்டும். ஜூலையில் நடைபெறவுள்ள புத்தக திருவிழாவில் அனைத்து மாணவா்களுக்கும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனவும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்சியில் பள்ளி ஆசிரியா்கள் மணிமேகலை, நிவின்,செல்வி ஜாய், வெள்ளைச்சாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT