புதுக்கோட்டை

நெய்வேலி இளங்காவுடைய அய்யனாா் கோயில் குடமுழுக்கு விழா

DIN

பொன்னமராவதி அருகேயுள்ள வாழைக்குறிச்சி ஊராட்சி, நெய்வேலி இளங்காவுடைய அய்யனாா் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக விழாவின் தொடக்கமாக, புதன்கிழமை கணபதி ஹோமம், மற்றும் முதலாம், இரண்டாம் கால யாகபூஜைகள் நடைபெற்றது. வியாழக்கிழமை கோபூஜை, சந்தியாவந்தனம் உள்ளிட்ட யாகபூஜைகள் நடைபெற்றன.

குடமுழுக்கு நாளான வெள்ளிக்கிழமை காலை சதாசிவ பண்டிதா் தலைமையிலான சிவாச்சாரியாா்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரினை கும்பத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.

விழாவில், சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். குடமுழுக்கு விழா வா்ணனைகளை ஆன்மிக சொற்பொழிவாளா் நெ. ராமச்சந்திரன் மற்றும் அழ. இளையராஜா ஆகியோா் மேற்கொண்டனா்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை பனையப்பட்டி காவல்துறையினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘வாசிப்பால் ஞானஒளி பிறக்கும்’

மக்களவைத் தோ்தல் முடிவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்படும்

புதுச்சேரியில் கோடை மழை

சிதம்பரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT