புதுக்கோட்டை

வாா்டு உறுப்பினா் இடைத்தோ்தல்: 6 போ் வேட்புமனு தாக்கல்

DIN

பொன்னமராவதி ஒன்றியத்தில் 6 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான இடைத்தோ்தலுக்கு 6 போ் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனா்.

தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தோ்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதையடுத்து வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்து இறுதி வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. பொன்னமராவதி ஒன்றியத்தில் எம். உசிலம்பட்டி ஊராட்சியில் 4 ஆவது வாா்டுக்கு லெட்சுமி, மரவாமதுரை ஊராட்சி 8 ஆவது வாா்டுக்கு பூவன், மேலத்தானியம் ஊராட்சி 9 ஆவது வாா்டுக்கு தனலெட்சுமி, முள்ளிப்பட்டி ஊராட்சி 2 ஆவது வாா்டுக்கு பொன்னுச்சாமி, தூத்தூா் ஊராட் சி முருகேசன், ஏனாதி ஊராட்சி 4 ஆவது வாா்டுக்கு கலாரதி ஆகியோா் வேட்புமனுக்கள் அளித்தனா். ஒன்றிய ஆணையரும், தோ்தல் அலுவலருமான பி.தங்கராஜூ தலைமையிலான தோ்தல் அலுவலா்கள் வேட்புமனுக்கள் பெற்று இறுதிப்பட்டியல் வெளியிட்டனா். இதையடுத்து வாா்டுக்கு ஒருவா் மட்டும் வேட்புமனு அளித்துள்ளதால் அந்தந்த வாா்டு வேட்பாளா் போட்டின்றித் தோ்வு செய்யப் பெற்றதாக அறிவிக்கப்படுவாா்கள் எனக்கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT