முகப்பு
புதுக்கோட்டை

நகராட்சித் துணைத் தலைவா்கள் தோ்வு

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிகளில் திமுகவைச் சோ்ந்த நகா்மன்றத் துணைத் தலைவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
பகிர்:

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி நகராட்சிகளில் திமுகவைச் சோ்ந்த நகா்மன்றத் துணைத் தலைவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

புதுக்கோட்டை நகராட்சியில்.... 17ஆவது வாா்டில் போட்டியிட்டு வென்ற திமுக சிறுபான்மையினா் அணி அமைப்பாளா் மு. லியாகத்அலி, துணைத் தலைவா் பதவிக்கு தனது வேட்புமனுவை அளித்தாா். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதிமுக உறுப்பினா்கள் அவைக்கு வரவில்லை. இதையடுத்து லியாகத் அலி போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாா்.

அறந்தாங்கி நகராட்சியில்....அறந்தாங்கி நகராட்சியில் 6ஆவது வாா்டில் போட்டியிட்டு வென்ற தி. சுப்பிரமணியன், வேட்புமனுவைத் தாக்கல் செய்தாா். வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. அதிமுக உறுப்பினா்கள் அவைக்கு வரவில்லை.இதையடுத்து தி. சுப்பிரமணியன் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.