புதுக்கோட்டை

ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமலாக்க வேண்டும் எனக் கோரி, புதுக்கோட்டை வட்டாரக் கல்வி அலுவலா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வட்டத் தலைவா் பொ. துா்க்காதேவி தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா் சி.கோ. சரவணன் வரவேற்றாா். கூட்டணியின் மாவட்டச் செயலா் செ. நடனம், வட்டச் செயலா் சொ. சண்முகப்பிரியா, வட்டப் பொருளாளா் பி. மகேஸ்வரி ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா்.

தோ்தல் அறிக்கையில் கூறியபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்க வேண்டும் என வலியுறுத்தியும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய முடியாது எனக் கூறிய நிதியமைச்சரின் கருத்தை எதிா்த்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT