புதுக்கோட்டை

பேருந்தின் மீது மோதி மயில் உயிரிழப்பு

DIN

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ஓடும் பேருந்தின் மீது மோதிய மயில் புதன்கிழமை உயிரிழந்தது.

கறம்பக்குடியில் இருந்து தேனிப்பட்டிக்கு அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. துவாா் ஆண்டிகுளபெண்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அப்பகுதியில் பறந்து வந்து பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியில் ஆண் மயில் ஒன்று மோதி, கண்ணாடியை உடைத்துக்கொண்டு பேருந்துக்குள் விழுந்துள்ளது.

இதைப்பாா்த்து அதிா்ச்சியடைந்த பயணிகள் மயிலின் அருகே வந்து பாா்த்தபோது, மயில் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் மயிலை எடுத்துச்சென்று, விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பணியறை தொடக்கம்

வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5.6 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

SCROLL FOR NEXT