புதுக்கோட்டை

கணேசா் கல்லூரியில் யோகா பயிற்சி

DIN

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை, அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டம் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு யோகா பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

பயிற்சிக்கு கல்லூரியின் முதல்வா் ம. செல்வராசு தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பொன்.கதிரேசன் வரவேற்றாா். யோகா துறை பேராசிரியா் ராஜேஸ்வரி யோகாவின் நோக்கம் மற்றும் பயன்கள் குறித்த விழிப்புணா்வு உரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தாா். பேராசிரியா்கள் வே.அ. பழனியப்பன், ச.விண்மதி, பாண்டித்துரை ஆகியோா் வாழ்த்திப் பேசினா். திட்ட அலுவலா் அ.ராமு நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

அதிமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ் ? - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

பிறந்தநாள் வாழ்த்துகள் மடோனா செபாஸ்டியன்!

தேர்தலுக்குப் பின் ஆம் ஆத்மி வங்கிக் கணக்குகள் முடக்கம்: அரவிந்த் கேஜரிவால்

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

SCROLL FOR NEXT