முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதியில் சிமெண்ட் கல்தளம் அமைக்க பூமிபூஜை அமைச்சா் பங்கேற்பு

பொன்னமராவதி பேரூராட்சியில் சிமெண்ட் கல்தளம் மற்றும் வடிகால் அமைப்பதற்கான பூமிபூஜை மற்றும் புதிய வழித்தட பேருந்து சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:21 AM
பகிர்:

பொன்னமராவதி பேரூராட்சியில் சிமெண்ட் கல்தளம் மற்றும் வடிகால் அமைப்பதற்கான பூமிபூஜை மற்றும் புதிய வழித்தட பேருந்து சேவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில், சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி பங்கேற்று, பொன்னமராவதி பேரூராட்சி சோழீஸ்வரா் கோயிலின் மேலவீதி, வடக்குவீதி உள்ளிட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ், ரூ. 45 லட்சம் மதிப்பில் சிமெண்ட் கல்தளம் மற்றும் வடிகால் அமைப்பதற்கான பூமிபூஜையை தொடங்கிவைத்தாா்.

இத்திட்டப் பணிக்காக ஆதிகாலத்து அலங்கார மாளிகை உரிமையாளா்கள் ஏபி. ஜெயபால், ஏபி. மணிகண்டன் ஆகியோா் பொதுமக்கள் பங்களிப்பு நிதியாக ரூ. 15 லட்சம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

விழாவில், பேரூராட்சி சாா்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை குறைக்கும் வகையில் பொதுமக்களுக்கு மஞ்சள்பை வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், திருச்சி-பொன்னமராவதி புதிய வழித்தட பேருந்து இயக்க சேவையை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

விழாவில், தனி மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் குழந்தைசாமி, பொன்னமராவதி பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன், ஒன்றியக் குழுத் தலைவா் சுதா அடைக்கலமணி, வட்டாட்சியா் ப.ஜெயபாரதி, அரசுப் போக்குவரத்து கழக கிளை மேலாளா் அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேரூராட்சி செயல் அலுவலா் மு.செ. கணேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments