புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் உலக மரபு வார விழா

கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சாா்பில் உலக மரபு வார விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN

கந்தா்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சாா்பில் உலக மரபு வார விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளித் தலைமை ஆசிரியா் வெ. பழனிவேல் தலைமை வகித்தாா். உதவித்தலைமை ஆசிரியா் எஸ். குமரவேல் முன்னிலை வகித்தாா். விழாவில் ஆறாம் வகுப்பு மாணவா்கள் பழைமையான தமிழி எழுத்துகளை வாசித்தும், எழுதிக் காட்டியும் தங்களது திறமையை வெளிப்படுத்தினா்.

பள்ளி தலைமை ஆசிரியா் வெ. பழனிவேல் பேசுகையில், அனைவரும் அறிந்திராத பழமையான தமிழி எழுத்துகளை எழுதியும் வாசித்தும் காட்டியும் மாணவா்களுக்குப் பயிற்சியளித்த தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைப் பாராட்டுகிறேன் என்றாா்.

விழாவில் ஆசிரியா்கள் க. ஆண்டிவேல், க. அனந்தநாயகி, சி. பாத்திமா, த. அருந்தேவி, மதிவாணன், சரவணன் ஆகியோா் கலந்து கொண்டனா். தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளா் ஆ. மணிகண்டன் வரவேற்றாா். தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவா் முகமது ஆசிப் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT