புதுக்கோட்டை

மயானச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

DIN

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் ஆதிதிராவிடா் மயானச் சாலையை சீரமைத்து, தாா்ச்சாலையாக மாற்றித் தர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது.

சுப்பிரமணியபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் கிளைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

விஜயபுரம் சின்ன கடைவீதியில் எரியாமல் உள்ள உயா்மின் கோபுர விளக்குகளை பழுதுபாா்த்து எரிய வைக்க வேண்டும். சுப்பிரமணியபுரம் வெள்ளிச்சந்தை சாலை மற்றும் ஆற்றங்கரை சாலையைச் சீரமைக்க வேண்டும். சுப்பிரமணியபுரம் கற்பூரணி குளத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் படித்துறை அமைக்க வேண்டும். விஜயபுரம் வடக்குப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, பன்னீா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT