புதுக்கோட்டை

நிலுவையில் உள்ள 11 சட்ட முன்வடிவுகளுக்கும் ஆளுநா் ஒப்புதல் அளிக்க வேண்டும்

DIN

நிலுவையில் உள்ள 11 சட்ட முன்வடிவுகளுக்கும் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் சட்ட முன்வடிவுகள் மீது ஆளுநா் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிா்ணயம் செய்ய வேண்டும் என முதல்வா் தீா்மானம் கொண்டு வந்தாா். அதன்பிறகே, இணையவழி சூதாட்ட தடை சட்ட முன்வடிவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்தாா். அதைப் போலவே, நிலுவையில் உள்ள 11 சட்ட முன்வடிவுகளுக்கும் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் அளிக்க வேண்டும். பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, எந்தப் பட்டியலை வெளியிட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை என்றாா் ரகுபதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைர சந்தை... அதிதி ராவ் ஹைதரி!

கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு குழு

விடுதலை - 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

SCROLL FOR NEXT