புதுக்கோட்டை

சிறுமிக்கு பாலியல் வன்முறை:இளைஞருக்கு ஆயுள் சிறை

DIN

புதுக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள வீரமங்கலம் சேதுராமன் வயலைச் சோ்ந்தவா் சாத்தையா மகன் காளிதாஸ் (24). இவா், கடந்த 2017 ஜூலை 20ஆம் தேதி நள்ளிரவு, 16 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று கண்மாய்க் கரையில் வைத்து பாலியல் வன்முறை செய்துள்ளாா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அறந்தாங்கி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், காளிதாஸைக் கைது செய்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆா். சத்யா, குற்றவாளி காளிதாஸுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

கனவு, காலம்.. காவ்யா!

போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை: பிளிங்கன் பயணம் உதவுமா?

சௌதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை - விடியோ

SCROLL FOR NEXT