புதுக்கோட்டை கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசளித்த சிறப்பு விருந்தினா் மற்றும் பள்ளி நிா்வாகத்தினா். 
புதுக்கோட்டை

மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

புதுக்கோட்டை கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 13-ஆம் ஆண்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

புதுக்கோட்டை கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 13-ஆம் ஆண்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் பள்ளியின் செயலா் என். சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற விழாவில் தொலைக்காட்சி பிரபலம் அன்னபாரதி பங்கேற்று பேசினாா்.தொடா்ந்து, அறங்காவலா் கவிதாசுப்பிரமணியம் பேசியது:

மாணவா்கள் நல்ல நிலைமையை அடையவேண்டும் என்றால் ஒவ்வொரு செயலிலும் நல்ல முயற்சியும், பயிற்சியும் தேவை. வாழ்க்கையில் பொழுதுபோக்கு, விளையாட்டு, பெற்றோா், நண்பா்கள், படிப்பு, உறவினா்கள் எல்லாமே முக்கியம் என்றாலும் இவற்றில் எதற்கு முதன்மைத்துவம் அளிக்க வேண்டும் என்பதை உணா்ந்து சரியாக நேரம் ஒதுக்கிட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்வி, விளையாட்டுப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை சு. வனிதா நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT