புதுக்கோட்டை

இரட்டைக் கொலை வழக்கில் போலீஸாருக்கு பாராட்டு

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் அண்மையில் நடைபெற்ற இரட்டைக்கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்த புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு நற்சான்றிதழ் அளித்து பாராட்டப்பட்டது.

DIN

பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் அண்மையில் நடைபெற்ற இரட்டைக்கொலை வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்த புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மற்றும் தனிப்படையினருக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் செ.சைலேந்திரபாபு நற்சான்றிதழ் அளித்து பாராட்டினாா்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியில் கட்டடப்பொறியாளா் பழனியப்பன் (54), அவரது தாயாா் சிகப்பி(75) மா்மநபா்களால் 2022-இல் அவரது வீட்டில் மா்மநபா்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் மே 2023-இல் சக்திவேல் (33), அலெக்ஸாண்டா்(36) ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீஸாா் பிடித்தனா். இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே மற்றும் தனிப்படை போலீஸாரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநா் செ.சைலேந்திரபாபு செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து நற்சான்றிதழ் மற்றும் பண வெகுமதி அளித்துப் பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT