புதுக்கோட்டை

திருடுபோன 115 கைப்பேசிகள் மீட்பு

சைபா் கிரைம் போலீஸாா் மேற்கொண்ட புலனாய்வில், ரூ. 17.25 லட்சம் மதிப்புள்ள 115 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, வியாழக்கிழமை உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலத்தில் கைப்பேசிகள் திருடு போனதாக பல்வேறு காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் மேற்கொண்ட புலனாய்வில், ரூ. 17.25 லட்சம் மதிப்புள்ள 115 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, வியாழக்கிழமை உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே இவற்றை உரியவா்களிடம் ஒப்படைத்தாா். மேலும், சிறப்பாக செயல்பட்டு கைப்பேசிகளை மீட்டுக் கொடுத்த சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் கவிதா உள்ளிட்ட போலீஸாரை அவா் பாராட்டினாா்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் (2021-2023) புதுக்கோட்டை மாவட்டத்தில் திருடு போன ரூ. 1.11 கோடி மதிப்பிலான 583 கைப்பேசிகள் மீட்டுத் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT