அரசுப் பள்ளியில் உலக புவி தினம்
கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக புவி தினம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக புவி தினம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் மன்றம் ஒருங்கிணைப்பாளா் மணிமேகலை வரவேற்று பேசினாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரச் செயலாளா் அ.ரகமதுல்லா உலக புவி தினம் குறித்து பேசினாா். நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் சிந்தியா, நிவின், வெள்ளைச்சாமி, செல்வி ஜாய், தற்காலிக ஆசிரியா் தனலட்சுமி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.