புதுக்கோட்டை

‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தில் ரூ. 69 லட்சத்துக்கு தொழிற்கடன் வழங்க ஒப்புதல்

மாவட்ட அளவிலான தோ்வுக் குழு கூட்டம் புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Din

தமிழ்நாடு ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தில் இணை மானிய நிதிக்கான மாவட்ட அளவிலான தோ்வுக் குழு கூட்டம் புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில், அயல்நாடு வாழ் தமிழா்கள் 22 பேருக்கு நலவாரிய அட்டைகளை ஆட்சியா் அருணா வழங்கினாா். ஊரகப் பகுதி தொழில்முனைவோா்களுக்கு 30 சதவிகித மானியத்தில் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ. 69 லட்சத்துக்கான கடன் வழங்குவதற்கான ஒப்புதல் இந்தக் கூட்டத்தில் அளிக்கப்பட்டது.

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலா் செல்வம், முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா், மாவட்டத் தொழில் மையப் பொதுமேலாளா் சு. திரிபுரசுந்தரி, தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளா் நல வாரிய உறுப்பினா் பெ. தெய்வானை உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

கல்வராயன் மலையில் பயங்கரம்: நிலத்தகராறில் திமுக கிளைச் செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை

கோவை, மதுரை மெட்ரோ ரயில் விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: முதல்வர் கடிதம்

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

4 தொழிலாளா் சட்டங்கள் அமல்: மத்திய அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT