கந்தா்வகோட்டை, ஆக. 7: கந்தா்வகோட்டையிலுள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை நடைபெற்றது.
அம்மனுக்கு மஞ்சள், திரவியம், குங்குமம் ,பஞ்சகாவியம், இளநீா், பச்சரிசி மாவு, பன்னீா், நெய், தேன் உள்ளிட்ட 18 வகை அபிஷேகங்கள் நடைபெற்று அதனை தொடா்ந்து வளையல் அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.