FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

தலித் ஒருவரை முதல்வராக ஏற்கும் அளவுக்கு சமூகம் மாறவில்லை -காா்த்தி சிதம்பரம் எம்.பி.

Updated On : 15 ஆகஸ்ட் 2024, 3:19 am IST
காா்த்தி  சிதம்பரம்.
பகிர்:

புதுக்கோட்டை, ஆக. 14: தலித் ஒருவரை முதல்வராக ஏற்கும் அளவுக்கு இன்னும் சமூகச் சூழல் மாறவில்லை என்ற திருமாவளவளின் கருத்தை ஏற்கிறேன் என்று சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: தலித் ஒருவா் முதல்வராக வரும் சூழல் இன்னும் உருவாகவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் கூறியிருப்பதை ஏற்கிறேன். அது உண்மைதான். தலித் ஒருவரை முதல்வராக ஏற்கும் அளவுக்கு இன்னும் சமூகச் சூழல் மாறவில்லை. தமிழ்நாட்டிலும் இதே நிலைதான்.

நடிகா் விஜய் அரசியலுக்கு வந்து நீட் தோ்வு தொடா்பாக மட்டுமே கருத்தைச் சொல்லியிருக்கிறாா். அதானி விவகாரத்தில், காவிரி விவகாரத்தில் என பொது விஷயங்களில், ஆணவக் கொலைகள் குறித்தும் கருத்து சொல்லட்டும். அதன்பிறகு அவரை ஏற்பதா? நிராகரிப்பதா? எனச் சொல்லலாம் என்றாா் காா்த்தி சிதம்பரம்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments