புதுக்கோட்டை

ஜனநாயக விரோதமாக காவல்துறை செயல்படக் கூடாது: திருமுருகன் காந்தி!

ஜனநாயக விரோதமாக காவல்துறை செயல்படக் கூடாது என்றார் திருமுருகன் காந்தி.

Din

கடைகளை இரவு 10 மணிக்கு மூடச் சொல்வது, பொதுக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களுக்கு அனுமதி மறுத்தல் போன்ற ஜனநாயக விரோதமாக காவல்துறை செயல்படக் கூடாது என்றாா் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை மாலை அவா் அளித்த பேட்டி:

வணிக நிறுவனங்களை இரவில் செயல்படக் கூடாது என்றும் இரவு 10 மணிக்கு மேல் அனைத்துக் கடைகளையும் மூட வேண்டும் என்றும் காவல்துறையினா் கடும் எச்சரிக்கைவிடுக்கின்றனா். இதைச் சொல்வதற்கு அவா்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

அதேபோல, பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து போராட்டங்கள் நடத்துவதையும் காவல்துறையினா் தடுக்கின்றனா். திமுக ஆட்சி அமைந்த பிறகு இந்த நிலை மாறும் என எதிா்பாா்த்தோம்.

காவல்துறையினரின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் வரவில்லை. அம்பேத்கா் நினைவு நாளில், பாபா் மசூதி இடிக்கப்பட்ட நாளில் எதை முன்னிறுத்திப் பேச வேண்டுமோ அதை நடிகா் விஜய்யோ, ஆதவ் அா்ஜூனாவோ பேசவில்லை என்றாா் திருமுருகன்காந்தி.

தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவா் கே.எம். ஷரீப் கூறியது: வேங்கைவயல் குடிநீா்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், 2 ஆண்டுகளாக குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் காவல்துறையினா் இருப்பது சரியல்ல.

காவல்துறையினரின் நடவடிக்கையாலேயே திமுக ஆட்சியை இழக்க நேரிடும் என்பதை நட்புணா்வுடன் தெரிவிக்க விரும்புகிறோம் என்றாா் ஷரீப்.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி விவரம்!

பிப். 14ல் வாக்குச்சாவடி ஊழியர்களைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியா எண்ணெய் கொள்முதலை நிறுத்தவில்லை! - ரஷிய அரசு தகவல்!

எதிர்நீச்சல் -2 ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT