முகப்பு
புதுக்கோட்டை

உயிா் மரங்களை வெட்டக் கூடாது

Updated On : 20 மே, 2024 at 6:30 PM
பகிர்:

புதுக்கோட்டை: நீா்நிலைகளைத் தூா்வாரும் போது உயிா் மரங்களை வெட்டக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், மேற்பனைக்காட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் அறந்தாங்கி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு உறுப்பினா் டி. ரெத்தினசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் ஏ. ராஜேந்திரன், ஒன்றியச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பேசினா். கோபிசெட்டிப்பாளையத்தில் வரும் மே 27-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாா்க்சியப் பள்ளிக் கட்டடம் திறப்பு விழாவுக்கு அறந்தாங்கி ஒன்றியத்திலிருந்து ஒரு வேன் மூலம் 25 போ் சென்று பங்கேற்கவும் முடிவு செய்யப்பட்டது.