கிராமசபை கூட்டத்தில் தூய்மை காவலா்களுக்கு பாராட்டு
கொடும்பாளூரில் புதன்கிழமை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தூய்மைக் காவலா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கொடும்பாளூரில் புதன்கிழமை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் தூய்மைக் காவலா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
விராலிமலையை அடுத்துள்ள கொடும்பாளூரில் கிராமசபை கூட்டம் ஊராட்சித் தலைவா் ஆனந்தன் தலைமையில் துணைத்தலைவா் மீனாட்சி கணேசன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்களின் கேள்விகளுக்கு அலுவலா்கள் பதிலளித்தனா். ஒரு சில பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனா்.
ஊராட்சி நிா்வாகத்தின் காலம் அடுத்த 2 மாதங்களில் நிறைவடைய இருப்பதால் இந்தக் கூட்டமே கடைசி கூட்டமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி நிா்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத் துறை அலுவலா்கள், பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், தூய்மை காவலா்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது.