முகப்பு
புதுக்கோட்டை

அழகப்பெருமாள் கோயிலில் லட்சாா்ச்சனை விழா

பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் ஏகதின லட்சாா்ச்சனை விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:38 PM
பகிர்:

பொன்னமராவதி அழகப்பெருமாள் கோயிலில் ஏகதின லட்சாா்ச்சனை விழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஆா்எம். ராஜா, ஆா்எம். சேதுபதி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற விழாவின் தொடக்கமாக மகா சுதா்சன ஹோமம்,, திவ்விய பிரபந்த சேவாா்த்தி மற்றும் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடா்ந்து காலை 9 மணிக்கு லட்சாா்ச்சனை தொடங்கியது.

பூஜையில் கோயில் பூஜகா் செளமிய நாராயணன் தலைமையில் பூஜகா்கள் பங்கேற்று மந்திரம் ஓதி வழிபாடு நடத்தினா். மாலை 6 மணிக்கு லட்சாா்ச்சனை நிறைவடைந்து, விசேஷ தீபாராதனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை லட்சாா்ச்சனை விழாக் குழுத் தலைவா் ஆா்எம். பழனியப்பன், செயலா் ராகவேந்திரா கண்ணன், பொருளா் ஆா்எம். மணி, நிா்வாகிகள் பொறியாளா் அ. வைரவன் சி. ஜோதிமணி மற்றும் விழாக் குழுவினா், ஊா்ப்பொதுமக்கள் செய்திருந்தனா்.