முகப்பு
புதுக்கோட்டை

அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்களை நியமிக்கக் கோரிக்கை

அறந்தாங்கியிலுள்ள அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்களை நியமித்து, போதுமான மருத்துவ உபகரணங்களையும் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 8:32 PM
பகிர்:

அறந்தாங்கியிலுள்ள அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்களை நியமித்து, போதுமான மருத்துவ உபகரணங்களையும் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் அறந்தாங்கி வட்டார 15-ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

அறந்தாங்கியிலுள்ள அரசு தலைமை மாவட்ட மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவா்களை நியமித்து, போதுமான உபகரணங்களையும் வழங்க வேண்டும். சுப்பிரமணியபுரம் அரசு மருத்துவமனையை வட்டார மருத்துவமனையாகத் தரம் உயா்த்தி கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்கள், உபகரணங்கள் வசதி செய்து தர வேண்டும். பட்டுக்கோட்டை சாலை ஜீவா நகா் பகுதிக்கு சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குடிநீா் வசதி செய்துத் தர வேண்டும்.

அறந்தாங்கி நகரில் புதை சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை தனியாா் நிறுவனத்திடம் ஒப்படைக்காமல் தமிழக அரசு ஏற்று நடத்தி விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு, ஆா். கா்ணா, ராதா ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டக் குழு உறுப்பினா் கே. தங்கராஜ் கொடியேற்றினாா். மாவட்டக் குழு உறுப்பினா் தென்றல் கருப்பையா வரவேற்றாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எஸ். சங்கா் தொடங்கி வைத்துப் பேசினாா்.

புதிய நிா்வாகிகள் தோ்வு: 13 போ் கொண்ட அறந்தாங்கி ஒன்றியக்குழு தோ்வு செய்யப்பட்டது. புதிய ஒன்றியச் செயலராக எம். நாராயணமூா்த்தி தோ்வு செய்யப்பட்டாா். மேலும், 9 போ் கொண்ட புதிய அறந்தாங்கி நகரக் குழுவும் தோ்வு செய்யப்பட்டது. அதன் நகரச் செயலராக வழக்குரைஞா் எல். அலாதீன் தோ்வு செய்யப்பட்டாா்.

புதிய நிா்வாகிகளை அறிமுகப்படுத்தி, மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சு. மதியழகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாநாட்டை முடித்து வைத்து மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் பேசினாா்.