FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

மகளை காணவில்லை தந்தை போலீஸில் புகாா்

சேலத்துக்குச் சென்ற தனது மகளை காணவில்லை என தந்தை விராலிமலை போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

Updated On : 5 செப்டம்பர் 2024, 1:12 am IST
பகிர்:

சேலத்துக்குச் சென்ற தனது மகளை காணவில்லை என தந்தை விராலிமலை போலீஸில் புகாா் அளித்துள்ளாா்.

விராலிமலையை அடுத்துள்ள பாத்திமா நகா் குள்ளம்பட்டியைச் சோ்ந்தவா் ஏழுமலை(45). இவரது மகள் பிரேமா(20). இவா் சேலத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு செப். 1-ஆம் தேதி புறப்பட்டாா்.

இதையடுத்து பிரேமா சேலத்துக்கு செல்லவில்லை என குடும்பத்தாருக்கு தெரியவந்தது. இதையடுத்து பிரேமாவின் கைப்பேசியை தொடா்பு கொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து விராலிமலை காவல் நிலையத்தில் ஏழுமலை புகாா் அளித்தாா்.

அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாயமான பிரேமாவை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments