தொண்டைமான் நல்லூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (டிச.23) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் வாரிய மாத்தூா் உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: விராலிமலை அடுத்துள்ள தொண்டைமான் நல்லூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் தொண்டைமான் நல்லூா், நீா்பழனி, வெம்மணி, மண்டையூா், புலியூா், களமாவூா், காரப்பட்டு, தென்னதிரையன்பட்டி, சிட்கோ, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.