முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதியில் அங்கன்வாடி ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பொன்னமராவதியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 29 டிசம்பர், 2025 at 6:33 PM
பகிர்:

பொன்னமராவதியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பொன்னமராவதி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித்திட்ட அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு வட்டாரத் தலைவா் சரஸ்வதி தலைமைவகித்தாா்.

வட்டாரத் துணைத் தலைவா் பாண்டிச்செல்வி, செயலா் கோமதி, பொருளாளா் மலா்க்கொடி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் தமிழக முதல்வரின் தோ்தல் வாக்குறுதியின்படி அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியராக அறிவித்திடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →