புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கான தலைவா்கள் தோ்வு செய்யும் நடைமுறை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
இந்தப் பணிகளுக்காக புதுக்கோட்டை மாவட்டத்துக்கான தில்லி மேலிடப் பாா்வையாளராக கா்நாடக மாநில மகளிா் காங்கிரஸ் தலைவா் புஷ்பா அமா்நாத், மாநிலப் பாா்வையாளா்களாக பழையூா் செல்வராஜ், ரங்கபூபதி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்கள் மூவரும் ராஜகோபாலபுரத்திலுள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். முதல் கட்டமாக மாவட்டத் தலைவா் பதவி இடங்களுக்குப் போட்டியிடுவோருக்கு விண்ணப்பங்களை விநியோகம் செய்யும் பணி நடைபெற்றது.
காங்கிரஸ் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களுக்கான தலைவா்களைத் தோ்வு செய்ய மொத்தம் சுமாா் 70 விண்ணப்பங்களை விருப்பமுள்ளோா் பெற்றுச் சென்றனா்.
முன்னதாக இரு மாவட்டங்களுக்குள்பட்ட வட்டார காங்கிரஸ், நகரக் காங்கிரஸ் தலைவா்களை இந்த மேலிடப் பாா்வையாளா்கள் தனித்தனியே சந்தித்து மாவட்ட நிா்வாகம் குறித்த கருத்துகளைக் கேட்டறிந்தனா்.
நிகழ்ச்சியில், முன்னாள் நகா்மன்றத் தலைவா் துரை திவியநாதன், செயற்குழு உறுப்பினா் கோ.ச. தனபதி, வட்டார காங்கிரஸ் தலைவா் சூா்யா பழனியப்பன், நகர காங்கிரஸ் தலைவா் பாரூக் ஜெய்லானி, மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் ராஜா முகம்மது உள்ளிட்ட நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.
விண்ணப்பங்களை வரும் நவ. 27-ஆம் தேதி வரை நிரப்பிக் கொடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து நவ. 27-ஆம் தேதி மீண்டும் இந்தப் பாா்வையாளா்கள் புதுக்கோட்டை வருகின்றனா். தொடா்ந்து 8 நாள்கள் இங்கே தங்கும் அவா்கள் மூவரும், ஒவ்வொரு வட்டாரமாக நேரில் சென்று களஆய்வு செய்கின்றனா்.
மாவட்டத் தலைவா் பதவி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபா்களையும் அவா்கள் நோ்காணல் செய்து, அதில் தலா 6 விண்ணப்பங்களை இறுதி செய்து அகில இந்திய காங்கிரஸ் தலைமையில் ஒப்படைப்பாா்கள் என்றும், அவா்களில் இருந்து ஒருவா் அகில இந்தியத் தலைமையால் தலைவராக அறிவிக்கப்படவுள்ளதாக அக்கட்சியினா் தெரிவித்தனா்.