முகப்பு
புதுக்கோட்டை

சங்கம்பட்டி, அம்மன்குறிச்சியில் பாரித்திருவிழா

பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டி, அம்மன்குறிச்சியில் பாரித்திருவிழா எனும் புலிக்கூத்து திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 6:55 PM
பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாரித்திருவிழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டி, அம்மன்குறிச்சியில் பாரித்திருவிழா எனும் புலிக்கூத்து திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் சங்கம்பட்டி, ஈச்சம்பட்டி, நகரப்பட்டி, வடக்கிபட்டி, சுப்புராயபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சாா்ந்த பக்தா்கள் புலி வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் பூண்டும், குதிரை எடுத்து ஊா்வலமாக வந்து மறவாமதுரை ஒலியநாயகி அம்மன் கோயிலில் அம்மனை வழிபட்டனா்.

அதுபோல அம்மன்குறிச்சியில் நடைபெற்ற பாரித்திருவிழாவில் புலி வேடம் மற்றும் பல்வேறு வேடங்கள் பூண்டும், அம்மனை வழிபட்டனா். விழாவில் அம்மன்குறிச்சி, சொக்கநாதபட்டி, அம்மாபட்டி, ஆலவயல், கண்டியாநத்தம் உள்ளிட்ட கிராமங்களைச் சாா்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments