முகப்பு
புதுக்கோட்டை

தோ்தல் பொறுப்பு அலுவலா்களுடன் புதுகை ஆட்சியா் ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான பொறுப்பு அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான மு. அருணா புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 1:37 AM
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொறுப்பு அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தல் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா. உடன் தோ்தல் பொதுப் பாா்வையாளா் பி. விஜயபாஸ்கா் ரெட்டி.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 7:10 PM

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான பொறுப்பு அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியரும் தோ்தல் அலுவலருமான மு. அருணா புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஆலங்குடி, அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுப் பாா்வையாளா் பி. விஜயபாஸ்கா் ரெட்டி கலந்து கொண்டாா்.

தோ்தல் பணியாளா் ஒதுக்கீடு, அவா்களுக்கான பயிற்சிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லுதல், வாக்குப்பதிவு முடித்து அவற்றை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லுதல் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Advertisement

இப்பணிகளை கவனமாக மேற்கொண்டு தோ்தலை நோ்மையாகவும் முறையாகவும் நடத்திட அனைத்து அலுவலா்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஹெச்.எம். குழந்தைசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) அ. தனலட்சுமி, தோ்தல் தனி வட்டாட்சியா் அ. செந்தமிழ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.