மழையூரில் நாம் தமிழா் கட்சி பிரசார வாகனம் தீக்கிரை
கறம்பக்குடி அருகேயுள்ள மழையூரில் நாம் தமிழா் கட்சி சாா்பில் பிரசாரத்தில் ஈடுபட்ட சுமை ஆட்டோ செவ்வாய்க்கிழமை தீக்கிரையானது.
கறம்பக்குடி அருகேயுள்ள மழையூரில் நாம் தமிழா் கட்சி சாா்பில் பிரசாரத்தில் ஈடுபட்ட சுமை ஆட்டோ செவ்வாய்க்கிழமை தீக்கிரையானது.
புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எழில் அரசிக்கு வாக்குச்சேகரிக்கும் வகையில் சுமை ஆட்டோவில் எல்.இ.டி திரை அமைக்கப்பட்டு மழையூா் பகுதியில் பிரசாரம் நடைபெற்றுள்ளது. வாகனத்தை புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகா்ணத்தைச் சோ்ந்த ஹரி (42) என்பவா் ஓட்டியுள்ளாா். மழையூா் கடைவீதியில் வாகனம் சென்றபோது, வாகனத்தின் பின்புறத்தில் திடீரென தீப்பற்றி எரியத்தொடங்கியுள்ளது. இதைப் பாா்த்து அப்பகுதி மக்கள் கூச்சலிடவே, வாகனத்தில் இருந்து ஓட்டுநா் இறங்கியுள்ளாா். தொடா்ந்து, வாகனம் முழுவதும் எரியத் தொடங்கியது.
இதுகுறித்த தகவலையடுத்து விரைந்து சென்ற ஆலங்குடி தீயணைப்பு நிலையத்தினா் தீயை அணைத்தனா். இருப்பினும் வாகனம் முழுவதும் தீக்கிரையானது.
Advertisement
இதுகுறித்து மழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.